நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி முறைகேடு விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முறைகேட்டின் பின்னணியில் செயல்பட்ட நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



