திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து ஒளிப்பதிவாளர் ஆகும் ஆசையில் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றினார்
கல்லூரி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
☐ செழியன் இயக்கிய டூலெட் படம் மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதை வென்றது.
திரைப்பட ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'உலக சினிமா' என்ற நூலையும் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 'தி ஃபிலிம் ஸ்கூல்' (The Film School) என்ற திரைப்பட பயிற்சி அமைப்பை செழியன் நடத்தி வந்தார். இந்த அமைப்பு மூலம் எதிர்கால சினிமா படைப்பாளிகளை உருவாக்க வழிகாட்டினார்
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



